ஐயர்தேவரும்...அரமண்ட ஹுசைனியும்

இப்போ நடந்த/நடக்கிற/நடக்கபோற இம்சைகளுக்கும், இணைய போராளிகளின் டென்ஷனுக்குமம் முழுகாரணமும் ஐயர்தேவர்தான் காரணமுன்னு சொன்னா நம்பமுடியுமா....

நம்பித்தான் ஆகணும். முதல்ல ஐயர்தேவர் யாருன்னா நண்பன் ஜெகதிஷோட அப்பா. ஆள் எதிர்காத்துல சைக்கிள் மிதிச்சுவந்தவர் மாதிரிதான் இருப்பாரு. ஆனா அந்தகாலத்து அமெரிக்கன் காலேஜ்ல படிச்சவரு. கைசுத்தம்/வாய்நீளம் அதனால படிச்ச படிப்புக்கு வேல கிடைக்கல. போங்காடன்னு நெல்பேட்டைல நெல்கமிஷன் ஏஜெண்டா வேலசெஞ்சுக்கிட்டு இருந்தாரு. வரும்படிகம்மி, ஊர்வாய மூடலாம் ஒச்சம்மா வாய மூடமுடியுமா. [ஒச்சம்மா அய்யரின் சகதர்மிணி- என்னாவாம் எவடி,எவடின்னு கொலாய் சண்டையில ஒச்சுஇறங்கிசுன்னா நானெல்லாம் கால்வழியே ஜலம் வச்சுகிற ஆளு] டெய்லி மண்டகப்படிதான். இவரு ஆளு என்னத்த கன்னையா போல/ஒச்சம்மா பொம்பள ராஜ்கிரண்... சொல்லவா வேணும்..உடம்பு அடிதாங்க சோமபானம்/சூராபானம்/சிவபானமெல்லாம் தண்ணிபட்டபாடு. ஆள்சரக்கு போட்டுட்டா செம சைலெண்ட். கொஞ்சம் ஓவரானா ரொம்ப வைலெண்ட்.. அந்தமாறி நேரத்துல காம்பவுண்டே அமைதியாகிடும்.. அப்போ போயி வாயப்புடுங்குனா ஆழ்நிலைதியானம் முதல் அப்துல்காலம் அணுவிஞ்ஞானம் வரைக்கும் பேசுவாப்பிடி.... கிட்டகுழி/தூரக்குவி மாறி ஏகபட்ட விஷயம் கைவசம் அத்துபடி. இவ்வளோ அறிவா பேசுற அப்புறமேன்னே இத குடிக்கிறேன்னு கேட்டா பார்ட்டி கப்சிப்

எங்கையோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்.

அன்னார் அமெரிக்கன் காலேஜ்ல படிக்கிறப்ப ஆபொனட் பார்ட்டி ஸுகான் இஷாக் ஹுசைனி. ஏதோ பிரச்னையாகி கும்பல்கூடி ஐயர தாளிச்சுட்டாங்க... அதோட விடாம ஆள்களையும் கூட்டிகிட்டு ஐயர அடிக்க மீனாச்சிபுரத்துக்கே வந்திட்டாங்க...[அப்போ அய்யர் மீனாட்சிபுரத்தில இருந்தாரு. கல்யாணத்துக்குபிறவுதான் செல்லூர்வந்தாரு]
அப்பவே ஹுசைனி அரமெண்டல்போல... பின்ன முதலைக்கு தண்ணிலதான் பலம்போல அவனவனுக்கு அவனவன் ஏரியாதான் பலமே. ஐயர்தேவர் சொந்த ஏரியா வேற.. ஊர்நாட்டாங்க கேட்கவா வேணும். மீனாட்சிபுரம்-ஆனையூர் ரோட்டல வெங்கடாசலபதி தியேட்டருக்கும், சுங்க/கலால் வரி குவாட்டர்ஸுக்கும் இடைபட்ட பகுதில சிக்குனான் சீதாகாதி... நீங்க நெனைச்சதுதான் நடந்துச்சு. சும்மா பிரி..பிரின்னு.. வைக்கோல்பிரிய பிரிச்சது போல பிரிச்சு மேஞ்சுட்டாங்க. ஐயர்தேவர் போட்ட போடுல ஹிசைனி மண்ட பொளந்துகிடுச்சு...அன்னைக்கு ஆன அரமெண்டல்தான் இப்போவர தெளியவே இல்ல...வந்த காரையும் நொறுக்கிட்டாங்க...

ஐயர்தேவர் ஒச்சுபஞ்சாயத்துல மருந்தடுச்சிட்டு கட்டையநீட்டிட்டார்... இப்போ நடக்கிற கூத்த மேல இருந்து பாத்துக்கிட்டு இருந்தா கஞ்சாகருப்பு மருந்தகுடிச்சிட்டு படுத்த ஆஸ்பத்திரி சீன்ல வர களவாணிபட பிரசிடெண்ட் போல

பிளடி ராஸ்கல்...என்ன காரியம் பண்ணுற..ஆணி ஏண்டி அடிக்கிற...கை/கால் விரல வெட்டிக்கவேண்டியது தானே கேப்பாரு.....


Post a Comment

0 Comments