ஐராவதம்....

கரெக்டா சொல்லணுமுன்னா 92 பாக்யான்னு நியாபகம், கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஒருத்தர் கேட்டிருந்தார்....குழந்தைகள வச்சு ஒரு பலான ஜோக் சொல்ல முடியுமான்னு? அதுக்கு நம்ம முருங்கை சித்தரோட பதில்... 
‘’ ஒரு அம்மா மதியம் தோழிகளோட பேசிக்கிட்டு இருப்பாங்க...பக்கத்துல தொட்டிலில படுத்திருக்கிற அவுங்க குட்டவாண்டு சத்தமா கேக்கும்... ஏம்மா பகல்ல அப்பாவ எதிர்த்து பேசாத நீ, ராத்திரி மட்டும் எப்படிமா கட்டிபிடிச்சு சண்டபோடுறேன்னு.....ஒரு குழந்தையா படிச்சப்போ பசக்குன்னு மனசுல ஓட்டிகிட்ட ஜோக் இது. கூடவே கேள்விகளும். குழந்தைகளுக்கு தாய் தந்தை தொடுஉணர்வு/புரிதல் இதெல்லாம் தெரியுமான்னு....

சரி இப்போ எதுக்கு இந்த ஊசுன வெண்ணைய உலர் ரொட்டியில தடவுறேன்னுதானே யோசிக்கிறீங்க....ஆம் பாதிக்கபட்டேன்,, நானே நேரடியா பாதிக்கப்பட்டேன்...

என்ர லக்கிக்கு 11 1/2 மாசம் நடக்குது....ப்ப்பா..ம்ம்மா...தா..த்தா..இது மூணுதான் இப்போ வாயில இருந்து வருது. ரெண்டு எட்டு எதையும் பிடிக்காம நடப்பா...விளையாட்டு சாமான விளையாடுற ஜோலி கிடையாது. பொம்மைக கை கால பிடுங்கிறது, ரிமோட்கார ஆன் பண்ணி தர சொல்லி, திருப்பி பிடிச்சுகிட்டு ஓடுற வீல கையால பிடிக்கிறதுன்னு....ஸு..ப்பா... இப்பவே கண்ண கட்டுது...ஆனாலும் வேலை படு சுத்தம்...அவ செய்யிற வேலையில இருந்து கவனத்த திசைதிருப்புறதுங்கிறது மந்திரத்தில மாங்காய் பறிக்கிற மாதிரி....தங்க்ஸ் அந்த மந்திரத்த இப்போ கண்டுபிடிச்சுட்டாங்க.... குட்டவாண்ட கூப்பிட்டாலும் திரும்பிபாக்காதவங்க...தங்க்ஸ் என் பக்கத்தில வந்து மண்வாசனை ரேவதி மாதிரி முகத்த மறைச்சுக்கிட்டு அழுது கேவுறகணக்கா ‘’ஆதிமூலமேன்னு அலறுன்னா ஐராவதம் மாதிரி [போட்டது போட்டபடி கிடக்க] வந்து மத்த கஜத்தால ரப்பு ரப்புன்னு ரெண்டு போடுறதும் இல்லாம...முன்னால வளந்திருக்கிற ரெண்டு ரேபிட் பல்லால கிடச்ச இடத்துல கரும்பிவச்சுட்டு வேற போயிடுறா...வரவர இந்த தங்ஸ்சோட குட்டி காவலன் ரவுசு எல்ல மீறி போய்க்கிட்டு இருக்கு. [எவ்வளோ தூக்கத்திலையும் அவுங்க அம்மாவோட வகுத்துல போய் சுருண்டு படித்துகிவா...தாயின் கதகதப்பும், உடலின் பால் வாசனையுமே வச்சு ஒரு கொழந்த தன் தாயை கண்டறியமுடியுமென்பது எவ்வளவு ஆச்சார்யமான விஷயம் கடவுளுக்கு நன்றி] சின்ன எ.கா வோட முடிச்சிடுறேன்.

கீழே உள்ள படம் சிறிலங்கா நீர்கொழும்புல கட்டுமரான் பீச் ரிசார்ட்ஸ்ல எடுத்தது. சரி தம்பதி சமேதரா ஒரு செல்பி எடுப்பமுன்னு தங்க்ஸ் தோள்மேல போட்டகைய எடுத்து விட்டுட்டுதான் இந்த மொறப்பு...அதில்லாம ரூம்க்கு போனவுடன் போட்டு பொளந்துட்டா வேற....

பாஸ் - மொட்ட பாஸ் [மொறைக்கிற மொசக்குட்டி]
இதுகெல்லாம் என்ன முடிவுனுதானே கேட்குறீங்க.....


முப்பத்து மூக்கோடி தேவர்களுக்கும் பகல்ல ரெஸ்ட் விட்டுட்டு நைட் ஷிப்ட் போடணும்...என்ர லக்கி மாதிரி இருக்க கொழந்தைகள தூங்க வைக்கிற வேலைய செய்ய சொல்லலாம்...[மக்கட் தொகை பெருக என்னாலான சிறு ஐடியா J J ]

Post a Comment

1 Comments

  1. ஹா ஹா ஹா... உண்மையிலேயே ஆக்ரோஷமான மொறைப்புதானுங்கோவ்... ஜாக்கிரதை...

    ReplyDelete