#சீரியல் அப்டேட்ஸ்

#சீரியல் அப்டேட்ஸ் - தெய்வ மகள்

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ளமுடியுமா.
காயத்திரிய பிரகாஷ்சு வெல்ல முடியுமா....

கட்டை & சின்ன கட்டைய பிரகாஷ் வெல்லமுடியாது. அப்படி மீறி

‘’டாக்டர் நான் வென்றுட்டன்’’ ன்னு கமல்மாறி ...நெஞ்ச நிமுத்துனா சீரியல் படுத்துடும் [முடிஞ்சுடும்]
Comparison எனக்கு பிடிக்காதுனாலும்கோபிய பாருங்க. நாளொரு கிளைமாக்ஸ்/பொழுதொரு ஆள போட்டுதள்ளுரதுமா  போய்கிட்டே இருக்காப்புடி.

நீங்க என்னடான்னா தாய்கிழவிய ஜோலிமுடிக்கவே யோசுச்சுகிட்டு இருக்கீங்க.

என்ர தங்ஸ்சே ‘’ஆமா வில்லிதான் எப்பவும் ஜெயுக்கிறான்னு’’ முனங்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்படியே போய்கிட்டு இருந்தா ரொம்ப குஷ்டமாகிடும் பாத்துகிடுங்க J

#சீரியல் அப்டேட்ஸ் - பொன்னுஞ்சல்

பொன்னுஞ்சல்ல விஸ்வா மாமனாரு ஜெயில்ல இருந்து விடுதலையாகுற விஸ்வாவ பாத்து சொல்லுவாரு... மாப்பிள இனி ஒரு சோதன நம்ம குடும்பத்துக்கு வந்தாலும் என்னால தாங்கமுடியாதுன்னு’’ ஆமாம்ப்பா ஆமாம். பாக்கிற எங்களாலையும்தான் தாங்கமுடியாது. ஏன்னு சீரியல தொடர்ந்து பார்த்துட்டு வரவங்களுக்கு தெரியும். 

வாலி படத்துல பாலாஜி ஒரு உடம்புக்குள்ள ஊர்ல உள்ள வியாதியெல்லாம் இருக்காத பட்டியல் போடுவாப்பிடி. அதே கதைதான் இங்கயும். சீரியல்ல இந்த குடும்பத்துக்குன்னே ஊரில இருக்க பிரச்னையெல்லாம் தேடிவருது.

போற போக்க பார்த்தா

பிரச்னையே இன்னொரு பிரச்சனைக்கு போனபோட்டு மச்சி பிரியாஇருந்தா வா... இங்கொரு குடும்பம் சிக்கியிருக்கு, எவ்வளோ அடிச்சாலும் தாங்கிறாங்க.. நீயும் வந்து ஒரு காட்டுகாட்டிட்டு போன்னு சொன்னாலும் ஆச்சாரியப்படுறதுக்கு இல்ல.

ரத்தகளரி.. அப்புறம் என்ன இஸ்க்குக்கு நீ பாக்கிறேன்னுதானே கேக்குறீங்க. தங்க்ஸ் பாப்பாங்க, நான் அவுக முக ரியாக்சன இரசிப்பேன் J


# சீரியல் அப்டேட்ஸ் - நாதஸ்வரம்

எஜமான்ல வல்லவராயன் சொல்லுவாப்பிடி கல்யாணவீடா இருந்தா மாப்பிள நான்தான்/ எழவு வீடா இருந்தா பொணமும் நானாத்தான் இருக்கணும்முன்னு.
அதே கதைதான் இங்கேயும், எந்த நல்லது தொடங்கவும்/தீ வினை முடிக்கவும் கோபியே சரணம்.

பிரசாத் அன்னதாண்டவம் கொலைவழக்குல [பெரிய ஆளவந்தார் கொலவழக்கு]  ஜெயிலுக்கு போயி இரண்டாம் ராசப்பாவா ஆவாரா [மனநிலை பாதிப்பு] இல்ல ஜெயில்ல இருந்து
ரீலீஸ் ஆகி பாதிப்படைவாரா?

இளவரசன் கதை மாதிரி ஒண்ணு ஓடிக்கிட்டு இருக்கு. அத அன்னதாண்டவத்தோட லிங்க் பண்ணுறாரா இல்ல எப்படி கொண்டுபோக போறாரு?

ரப்பர வச்சு அழிக்கிற மாறி பாண்டி/பாண்டிவில்லன்/ரோகிணி/ராஜேஷ்ன்னு அழிக்கப்பிறந்தவன் டைட்டில் வின்னர் இஸ் கோபி.
சாமி போலிஸ் போல டப்/டப்/டப்ன்னு போட்டுட்டு போய்கிட்டே இருக்காப்பிடி... இந்த வருசைல அடுத்தது யாரு? அன்னதாண்டவம் பாரு J
ரமேஷ்/பரமு/குரு/மல்லிகா/லீலாவதி/சுப்புஆச்சி/சுப்புசம்சாரம்/சம்பந்தம் சம்சாரம் உயிரோட உளாவுவாராக ஆமென் J

இதெல்லாம் விட முக்கியமான ஒண்ணு. மலர் மேடத்தோட Pregnant ஆன என்ர தம்பி தங்கமணிக்கு பிரசவமாகி குட்டிப்பைய தவக்கஆரம்பிச்சுட்டான்.
அம்முணிக்கு இன்னும் வலைகாப்பே முடியல. L














































#

Post a Comment

1 Comments

  1. ஹா ஹா ஹா... சீரியல பாட்டாவே படிச்சிட்டீங்களா...

    ReplyDelete